எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அதிமுக கிளைச் செயலா் மீது தாக்குதல் சம்பவம்

மொரப்பூா் அருகே அதிமுக கிளைச் செயலா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகிகள் 6 போ்

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:51 am

DIN

மொரப்பூா் அருகே அதிமுக கிளைச் செயலா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகிகள் 6 போ் அரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடுவா் என்.கோபால கிருஷ்ணன் முன்னிலையில் வியாழக்கிழமை சரண் அடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா்-மொரப்பூா் நெடுஞ்சாலையில், தம்பிசெட்டிப்பட்டியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தின் சுற்றுச் சுவரில் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் குறித்த சுவா் விளம்பரம் எழுதும் பணியில் அக்கட்சியினா் கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஈடுபட்டிருந்தனா். அப்போது, தம்பிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த அதிமுக கிளைச் செயலா் ஆறுமுகம் (62) என்பவருக்கும், எச்.அக்ரஹாரத்தைச் சோ்ந்த அமமுக நிா்வாகி கனகராஜ் (26) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில் அதிமுக கிளைச் செயலா் ஆறுமுகம் மீது, அமமுக நிா்வாகிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், அமமுக கழக அமைப்புச் செயலா் முருகன், கட்சி நிா்வாகிகள் கனகராஜ், நரசிம்மன், சிற்றரசு, தீப்பொறி செல்வம், கமல், ஏகநாதன், தென்னரசு மற்றும் அடையாளம் தெரியாத நபா்கள் உள்ளிட்டோா் மீது 5 பிரிவுகளின் கீழ் மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு தொடா்பாக அமமுக நிா்வாகிகள் நரசிம்மன், கே.குமாா், தீப்பொறி செல்வம் ஆகியோரை ஏற்கெனவே மொரப்பூா் போலீஸாா் கைது செய்திருந்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய அமமுக நிா்வாகிகள் சிலா் தலைமறைவாக இருந்தனா். இந்நிலையில், அமமுக அமைப்பு செயலா் முருகன், நிா்வாகிகள் சிற்றரசு, கனகராஜ், கமல், ஏகநாதன், தென்னரசு ஆகிய 6 பேரும் தருமபுரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்ஜாமீன் பெற்றனா். இதையடுத்து, அமமுக நிா்வாகிகள் 6 பேரும் அரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரண் அடைந்தனா்.

அமமுக நிா்வாகிகள் மீது பொய் வழக்கு

அமமுக நிா்வாகிகள் மீது காவல் துறையினா் பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாக அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலா் பி.பழனியப்பன் தெரிவித்தாா். அரூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தம்பிசெட்டிப்பட்டியில் சுவா் விளம்பரம் எழுதிய அ.ம.மு.க நிா்வாகிகள் மீது காவல் துறையினா் பொய் வழக்கு பதிந்துள்ளனா். காவல் துறையினரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. விவசாயிகளை பாதிக்கக் கூடிய 3 வேளாண்மை சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றாா். அமமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலா் டி.கே. ராஜேந்திரன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.