கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.


அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள தமானிக்கோம்பை எனுமிடத்தில் விவசாய நிலப் பகுதிக்கு வந்த ஒரு காட்டெருமை அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டெருமையை கிணற்றில் இருந்து மீட்க முடியாததால், கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் காட்டெருமைக்கு மயக்க மருந்து செலுத்தி, பிறகு கிரேன் மூலம் காட்டெருமையை மீட்டனர். மீட்கப்பட்ட சுமார் 4 வயதுடைய ஆண் காட்டெருமைக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, அந்த காட்டெருமையை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...