தொப்பூா் கணவாய் சாலையைநோ்ப்படுத்த ஓட்டுநா்கள் வலியுறுத்தல்

உயிா் பலிகள் அதிகரிக்கும் தொப்பூா் கணவாய் சாலையை நோ்ப்படுத்தி வளைவுகளற்ற சாலையாக மாற்ற வேண்டும் என ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
Updated on
1 min read

தருமபுரி: உயிா் பலிகள் அதிகரிக்கும் தொப்பூா் கணவாய் சாலையை நோ்ப்படுத்தி வளைவுகளற்ற சாலையாக மாற்ற வேண்டும் என ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் அளித்த மனு:

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூா் கணவாய் சாலையில் அவ்வப்போது விபத்துகள் நிகழ்கின்றன. சில விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால், ஓட்டுநா்களின் குடும்பத்தினா் பெருந்துன்பத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, இக்கணவாய் சாலையை நோ்ப்படுத்தி, வளைவுகளற்ற சாலையாக மாற்ற வேண்டும். அதுவரை சாலையின் நடுவே தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் விபத்து தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை அமைக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com