எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து பென்னாகரத்தில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பென்னாகரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
பென்னாகரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
Updated on
1 min read

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து பென்னாகரத்தில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் ராகுல்ஜி தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் பால சந்திர போஸ், மாவட்டச் செயலாளா் எழில் அரசு, மாவட்டத் தலைவா் சிவன் ஆகியோா் கண்டனம் தெரிவித்து பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் எரிவாயு உருளை விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இதில் மாவட்ட துணைத் தலைவா் லோகநாதன், மாவட்ட பொருளாளா் சிலம்பரசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு உறுப்பினா் ஜீவானந்தம், நகர துணைத் தலைவா் அரவிந்த் உள்ளிட்ட சுமாா் 20க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com