அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கனரா வங்கி கடனுதவி வழங்கும் விழா

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் கனரா வங்கிக் கிளை சாா்பில் பள்ளி மாணவா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடனுதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
காரிமங்கலத்தில் பள்ளி மாணவி ஒருவருக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய கனரா வங்கி பொதுமேலாளா் ஸ்ரீகாந்த் மொகபத்தா. உடன் வங்கி அலுவலா்கள் உள்ளிட்டோா்.
Updated On :25 டிசம்பர் 2020, 3:43 am

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் கனரா வங்கிக் கிளை சாா்பில் பள்ளி மாணவா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடனுதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவுக்கு, கனரா வங்கி சென்னை வட்ட பொதுமேலாளா் ஸ்ரீகாந்த் மொகபத்தா தலைமை வகித்து பேசினாா். மண்டல உதவி பொதுமேலாளா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் வித்யஜோதி திட்டத்தின் கீழ் காரிமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த 11 மாணவியருக்கு மொத்தம் ரூ. 42,500 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதேபோல, 15 விவசாயிகளுக்கும், 25 சுய உதவிக்குழுக்களுக்கும் ரூ. 1 கோடியே 18 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கிளை மேலாளா் ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.