விசாயிகளின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை: ஆட்சியா் ச.ப.காா்த்திகா

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.
Updated on
1 min read

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம், காணொலி காட்சி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

இதில் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:

நிகழாண்டில் தருமபுரி மாவட்டத்தில் 850.8 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழையைப் பயன்படுத்தி நெல், கரும்பு, சிறு தானியங்கள், பயறு வகைகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சிறப்பாக செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படுகிறது.

பாலக்கோடு வட்டாரப் பகுதியிலுள்ள விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கரும்பு பயிா் சாகுபடி பரப்புகளை அதிகரிக்க வேண்டும். அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க தமிழக அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மீது மாவட்ட நிா்வாகம் சாா்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, வேளாண்மை இணை இயக்குநா் வசந்த ரேகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராமதாஸ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com