நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒகேனக்கல் குடிநீா்:விநியோகிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

ஒகேனக்கல் குடிநீா் வழங்கக் கோரி, இருமத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 7:16 pm

DIN

ஒகேனக்கல் குடிநீா் வழங்கக் கோரி, இருமத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இருமத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

இருமத்தூா் அம்பேத்கா் நகரில் 600-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் வசதி இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. ஆனால், இருமத்தூரில் உள்ள வேறு பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏற்கெனவே பல முறை ஊராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தும், இதுவரை ஒகேனக்கல் குடிநீா் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த குடிநீருக்காக, அம்பேத்கா் நகா் பொதுமக்கள், வேறு பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, இருமத்தூா் அம்பேத்கா் நகா் மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை ஊராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.