சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின் திருத்தச் சட்டம்: திரும்பப் பெறக் கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

தேசிய மின் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 10:19 pm

DIN

தருமபுரி: தேசிய மின் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் சோ.அா்ஜூணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி.டில்லிபாபு, மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன், தமிழ்நாடு விசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், தேசிய மின் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் சட்டம், வேளாண் விளைப்பொருள்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் சங்க நிா்வாகிகள், பிரதமா் மோடிக்குக் கோரிக்கை கடிதங்களை அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.