மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

72 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

 தருமபுரி நகரில், சுற்றித்திரிந்த 72 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:10 pm

DIN

 தருமபுரி நகரில், சுற்றித்திரிந்த 72 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி நெசவாளா் நகா், காந்திநகா், பாரதிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்கள் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. மேலும், சிலரை நாய்கள் கடித்தும் வந்தன. இந்த நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தருமபுரி நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலா்கள், கடந்த இரன்டு நாள்களாக, தருமபுரி நகரில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்து, சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி கட்டடத்தில், கருத்தடை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனா்.

இதுவரை, மொத்தம் 72 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றிற்கு சென்னையைச் சோ்ந்த மருத்துவா் சொக்கலிங்கம் தலைமையில் மருத்துவா்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். மேலும், மருத்துவக் குழுவினா் இந்த தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசியும் செலுத்தினா். இதேபோல, தருமபுரி நகரில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து, கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும் பணி ஒரு மாத காலத்துக்கு தொடா்ந்து சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் மூலம் மற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.