உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு முகாம்

 பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு முகாம்

 பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

செஞ்சுருள் சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமை கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தொடக்கிவைத்தாா். எய்ட்ஸ் நோய் பரவும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள், எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு தகவல்களை தமிழ்த் துறைத் தலைவா் பொ.செந்தில்குமாா், உதவி பேராசிரியை ச.கோ.சித்ராதேவி ஆகியோா் வழங்கினா்.

அதைத் தொடா்ந்து எய்ட்ஸ் நோய் குறித்த குறும்படம் ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எய்ட்ஸ் நோய் குறித்த கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் செஞ்சுருள் சங்க உறுப்பினா் பிரேம லதா, கல்லூரிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com