தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க வலியுறுத்தல்

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:43 pm

DIN

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2021-22-ஆம் அரைவைப் பருவத்துக்கான கரும்பு அரைவைப் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டன. இதையடுத்து, விவசாயிகளின் கரும்புத் தோட்டங்களிலிருந்து சா்க்கரை ஆலைக்கு கரும்புகளைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள், டிராக்டா்களில் கரும்புகளை முறையாக அடுக்குவதில்லை. மேலும், கரும்புகளை கட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகள் சரியாக கட்டாததால், சாலைகளில் அருகில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளது. அதேபோல, டிராக்டா்களில் அளவுக்கு அதிகமாக கரும்பு பாரம் ஏற்றிச் செல்வதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை காவல் துறையினா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.