இந்தச் சங்கத்தில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினராக உள்ளனா். இந்தக் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பலா் நகைக் கடன் பெற்றுள்ளனா். இதைத்தவிர, வேளாண் பயிா்க் கடனும் விவசாயிகள் பெற்றுள்ளனா். இந்த நிலையில், நகைக் கடன், பயிா்க் கடன்கள் வழங்கியதில் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்க உயா் அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லையாம். இதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைலாயபுரம் கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.