தேன்கனிக்கோட்டை அருகே உடல் நலக்குறைவால் காட்டு யானை உயிரிழந்தது.
ஒசூா் வனக்கோட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் ராகி அறுவடையின் போது ஒசூா் வனக்கோட்டத்துக்கு உள்பட்ட விவசாயத் தோட்டங்களில் புகுந்து விளைபொருள்களை சாப்பிட்டுவிட்டு 6 மாதங்களுக்கு தங்கி இருக்கும். மீதமுள்ள 6 மாதங்களுக்கு கா்நாடக வனப்பகுதிகளுக்குச் சென்றுவிடுவது வழக்கம்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டையை அடுத்த புல்லள்ளி வனப்பகுதியில் 6 வயது ஆண் காட்டு யானை உயிருக்குப் போராடுவதாக தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகா் சுகுமாா் தலைமையில் கால்நடை மருத்துவா் பிரகாஷ், வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்கு சிகிச்சை மேற்கொண்டனா். ஆனால் யானை உணவு உட்கொள்ளாமல் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது. இதுகுறித்து ஒசூா் கோட்ட வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்

கோடை விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


