ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கழிவுநீா்க் கால்வாய் வசதி ஏற்படுத்தத் தரக் கோரிக்கை

மொரப்பூா், அண்ணல் நகரில் கழிவுநீா்க் கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:34 pm

DIN

மொரப்பூா், அண்ணல் நகரில் கழிவுநீா்க் கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், மொரப்பூா் கிராம ஊராட்சியில் அண்ணல் நகா், சிந்தல்பாடி கூட்டுச் சாலை, மேட்டுகாலனி, மொரப்பூா், கல்லூா், வெள்ளக்கல்ரோடு, ராசலாம்பட்டி, எம்.வேட்ரப்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சுமாா் 7 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன.

மொரப்பூா் அண்ணல் நகரில் போதிய கழிவுநீா் கால்வாய் வசதிகள் இல்லை. இதனால், குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் மற்றும் மழைநீா்த் தேங்குவதால் பொதுமக்கள் கொசுத் தொல்லை மற்றும் சுகாதாரக் கேடால் பாதிக்கப்படுகின்றனா். தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மொரப்பூா், அண்ணல் நகரில் கழிவுநீா்க் கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.