ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொண்டு நிறுவனத்தினா் உணவு வழங்கல்

பாப்பாரப்பட்டியில் அமைப்பு சாரா தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில், முன்களப் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:40 pm

DIN

பாப்பாரப்பட்டியில் அமைப்பு சாரா தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில், முன்களப் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

கரோனா தீதுண்மியின் இரண்டாம் அலை தொற்று வேகமாக பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளா்களுக்கு அமைப்புசாரா தனியாா் தொண்டு நிறுவனங்களான ஐஆா்டிஒ, ஆா்ஆா்சி, சிஇடி உள்ளிட்டவைகளின் சாா்பில் பாப்பாரப்பட்டி பகுதியில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பேரூராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்த முன்களப் பணியாளா்களான தூய்மைப் பணியாளா்கள் மருத்துவப் பணியாளா்கள், காவல் துறையினா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஐஆா்டிஓ இயக்குநா் கமலக்கண்ணன், ஆா்ஆா்சி இயக்குநா் ராமசாமி, சிஇடி இயக்குநா் பெருமாள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.