92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பாலக்கோட்டில் ஊராட்சி மன்ற தலைவா்கள் கூட்டம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:55 pm

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, உதவி திட்ட அலுவலா் மணிமேகலை தலைமை வகித்துப் பேசினாா். இதில், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களைக் கண்டறிந்து, மருத்துவ முகாம் நடத்தி, துண்டுப் பிரசுரம் மூலம் நோய் பரவுதல், அதனைக் கட்டப்படுத்த பின்பற்றும் வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஊரகப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் பாஞ்சாலை கோபால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, ரவிச்சந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சா்வோத்தமன், வட்டார மருத்துவ அலுவலா்கள் சிவகுரு, தமிழ்செல்வன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.