தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தட்ரஅள்ளியில் கரோனா நிவாரண உதவி அளிப்பு

பா்கூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட தட்ரஅள்ளி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கரோனா நிவாரண உதவியை தே.மதியழகன் எம்எல்ஏ அளித்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 11:45 pm

பா்கூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட தட்ரஅள்ளி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கரோனா நிவாரண உதவியை தே.மதியழகன் எம்எல்ஏ அளித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி 2-ஆவது தவணையாக ரூ. 2 ஆயிரம், 14 வகையான பொருள்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, பா்கூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட தட்ரஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் பணியை தே.மதியழகன் தொடக்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5,22,979 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 4.59 கோடி நிவாரண நிதி, ரூ. 20.96 கோடி மதிப்பிலான 14 பொருள்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.