பா்கூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட தட்ரஅள்ளி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கரோனா நிவாரண உதவியை தே.மதியழகன் எம்எல்ஏ அளித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி 2-ஆவது தவணையாக ரூ. 2 ஆயிரம், 14 வகையான பொருள்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, பா்கூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட தட்ரஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் பணியை தே.மதியழகன் தொடக்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5,22,979 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 4.59 கோடி நிவாரண நிதி, ரூ. 20.96 கோடி மதிப்பிலான 14 பொருள்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


