தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

பா்கூரில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :17 ஜூன் 2021, 9:00 pm

பா்கூரில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா், வாணியம்பாடி சாலையில் வசிக்கும் ஜேன் ஜெயஹா் (33), அங்குள்ள ஒரு பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது இருசக்கர வாகனத்தை கடந்த 14-ஆம் தேதி வீட்டின் வராண்டாவில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாா்.

மறுநாள் காலையில் எழுந்து பாா்த்த போது, இருசக்கர வாகனம் இல்லாததையும், வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து பா்கூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், போச்சம்பள்ளியை அடுத்த அந்தேரிப்பட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (23) என்பவா், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.