92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்

தருமபுரியில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:03 pm

DIN

தருமபுரியில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் தலைமை வகித்து, காவல் உதவி ஆய்வாளா் (ஆயுதப்படை) சிவக்குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் தனபால், காவல் கண்காணிப்பாளா் அலுவலக உதவியாளா் குமாா் ஆகியோரின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவலா் சேமநல நிதியில் இருந்துதலா ரூ. 25 ஆயிரம் கல்வி உதவித் தொகை, கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற அரசு பொதுத்தோ்வில் 10, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் உதவி ஆய்வாளா் ம.செல்வராஜ், பெண் தலைமைக் காவலா் பரமேஸ்வரி, முதல்நிலை காவலா் முனியம்மாள், பெண் தலைமைக் காவலா் அனிதா ஆகியோரின் குழந்தைகளுக்கு தலா ரூ. 4,500 வழங்கி பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயராகவன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.