92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காவலா்களுக்கு கரோனா தடுப்பூசி

தருமபுரி மாவட்டத்தில் காவலா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் காவலா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில் மாவட்டத்தில் பணியாற்றும் காவலா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல காவலா்களின் குடும்பத்தினருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாமலை, துணை காவல் கண்காணிப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.