92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின் மயானம் நாள் முழுவதும் செயல்படும்

தருமபுரி நகராட்சி மின் மயானம் நாள் முழுவதும் செயல்படும் என நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

தருமபுரி நகராட்சி மின் மயானம் நாள் முழுவதும் செயல்படும் என நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

தருமபுரி பச்சையம்மன் கோயில் அருகே அமைந்துள்ள நகராட்சி மின் மயானத்தில் காத்திருப்புக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை நகராட்சி ஆணையா் ஆ.தாணுமூா்த்தி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

தருமபுரி மின் மயானம் நாள் முழுவதும் மூன்று ஷிப்ட் அடிப்படையில் செயல்படும். இங்கு அடக்கம் அல்லது எரியூட்ட வரும் சடலங்கள் குறித்த விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். எரியூட்டப்படும் பணியை முறைப்படுத்திட ஏற்கெனவே உள்ள சுகாதார ஆய்வாளா்களுடன் மேலும் இரு சுகாதார ஆய்வாளா்கள், மூன்று மயான உதவியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்களுடன் தன்னாா்வலா் குழுவினரும் உடனிப்பா்.

இக்குழுவினா் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் சடலங்களை முறையாக எரியூட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வா். எனவே உயிரிழந்தோரின் சடலங்களை நல்லடக்கம் செய்ய அதிக தொகை செலவிட வேண்டிய அவசியம் இனி இருக்காது.

இதேபோல மின் மயானத்தில் உயிரிழந்தவா்களின் சடலங்களை கொண்டு வருவோா், இறுதிச் சடங்கு செய்ய வருவோருக்கு காத்திருப்புக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின் போது, நகராட்சி பொறியாளா் சுரேந்திரன், சுகாதார ஆய்வாளா்கள் ரமணச்சரண், சுசீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.