புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நிரம்பியது வள்ளிமதுரை வரட்டாறு அணைஏரிகளை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணை வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:41 pm

DIN

அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணை வெள்ளிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ள வரட்டாறு அணை அதன் நீா்ப்பிடிப்பு உயரமான 34.45 அடியை வெள்ளிக்கிழமை எட்டியது. இந்த அணை தடுப்பணை வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால் உபரிநீா் தானாகவே வெளியேறும் வசதி உள்ளது.

உபரிநீரை இடது, வலதுபுறக் கால்வாய்களில் திருப்பிவிடுவதன் மூலம் அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூா், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 30-க்கும் அதிகமான ஏரிகள், குளங்கள் நிரம்புவதுடன் 6 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

எனவே, வரட்டாற்றில் வெளியேறும் உபரிநீரைப் பயன்படுத்தி வடு கிடக்கும் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாணியாற்றில் வெள்ளப் பெருக்கு : பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையின் மொத்த நீா்ப்பிடிப்பு உயரம் 65.27 அடியாகும். தற்போது அணையின் நீா்மட்டம் 64.30 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து நொடிக்கு 100 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் வாணியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.