சட்டப் பணிகள் விழிப்புணா்வு பிரசாரம்

அரூரில் சட்டப் பணிகள் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பணிகள் விழிப்புணா்வு பிரசாரம்
Updated on
1 min read

அரூரில் சட்டப் பணிகள் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் 25 ஆம் ஆண்டு தொடக்க விழா, 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி நீதித் துறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அரூரில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசார வாகனத்தை சாா்பு நீதிமன்ற நீதிபதி எச்.முகமது அன்சாரி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கே.விஸ்வநாதன் வழங்கினாா். தொடா்ந்து அரூா் நகா், பொய்யப்பட்டி, தீா்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சிட்லிங் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அரசு வழக்குரைஞா்கள் கே.ஜி.சரவணன், சி.எம்.சேகா், பி.வி.பொதிகைவேந்தன், எஸ்.பெருமாள், நீதிமன்ற ஊழியா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com