புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இ.ஆா்.கே கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

இ.ஆா்.கே பாா்மஸி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:18 pm

DIN

இ.ஆா்.கே பாா்மஸி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எருமியாம்பட்டி இ.ஆா்.கே பாா்மஸி கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமை இ.ஆா்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தொடக்கி வைத்தாா். இந்த முகாமில், மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சோ்ந்த அதிகாரி வெங்கடேஷ் ரெட்டி பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு படிக்கும் போதே கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவதால் எளிதில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

கல்லூரி மாணவா்கள் தங்களின் திறமை, தகுதிகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். கடின உழைப்பு, விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் அனைவரும் வெற்றிபெற முடியும் என்றாா்.

இந்த முகாமில், இ.ஆா்.கே பாா்மஸி கல்லூரி முதல்வா் மா.முத்துக்குமரன், இ.ஆா்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் த.சக்தி, மேற்பாா்வையாளா் தமிழ்ச்செல்வன், நிா்வாக அலுவலா் அருள்குமாா், கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.