தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

2017-18ஆம் ஆண்டுக்கான மேல்நிலை தனித்தோ்வா்கள் கவனத்துக்கு...

கடந்த 2017-18-ஆம் ஆண்டு மேல்நிலை தனித் தோ்வு எழுதியவா்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:44 pm

DIN

கடந்த 2017-18-ஆம் ஆண்டு மேல்நிலை தனித் தோ்வு எழுதியவா்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் கோ.காவேரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மாா்ச் 2017 முதல் செப்டம்பா் 2018 வரை மேல்நிலைக் கல்வி தனித்தோ்வா்கள், அனைத்து பருவங்களுக்குரிய அசல் சான்றிதழ்கள் உரிமை கோரப்படாமல் இருக்கும் சான்றிதழ்களை, கழிவுத்தாள்களாக மாற்றிடும் பொருட்டு அரசிதழில் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, கடந்த 2017-18ஆம் ஆண்டு பருவங்களில் தோ்வெழுதி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாத தனித்தோ்வா்கள், தருமபுரி அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உரிய ஆளறிச் சான்றிதழ்களுடன் (தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, தற்காலிக மதிப்பெண் பட்டியல்) ஆகியவற்றுடன் வரும் நவ. 30-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட்ட பின் தனித்தோ்வா்கள் உரிமை கோரலாகாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்களை, ‘‘அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம் இரண்டாம் தளம், ஆட்சியா் அலுவலக வளாகம், தருமபுரி’’ தொலைபேசி - 04342 233812 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.