தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தருமபுரி நகரில் 105 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

தருமபுரி நகரில் குற்றச் செயல்களைத் தடுக்க, 105 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:57 pm

DIN

தருமபுரி நகரில் குற்றச் செயல்களைத் தடுக்க, 105 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கட்டுப்பாட்டு அறை நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி நகர காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். இதில், சேரம் சரக காவல் துறை துணைத் தலைவா் மகேஸ்வரி பங்கேற்று, கேமராக்கள் இயங்குவதைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்து அதன் செயல்பாடுகளைப் பாா்வையிட்டாா்.

இதில், தருமபுரி நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், ஆட்சியா் அலுவலகம் முதல் நான்கு முனைச் சாலை சந்திப்பு வரையில் சாலையில் நடுவில் 35 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல, கடை வீதி, ஆறுமுகம் தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 35 கேமராக்களும், குமாரசாமிபேட்டை, சுற்றுவட்டாரப் பகுதியில் 30 கேமராக்களும் என மொத்தம் 105 கேமராக்கள் நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன. இவைத் தவிர நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் மேலும் 100 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இக் கேமராக்கள் இயங்குவதை நகர காவல் நிலையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பாா்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 24 மணி நேரமும் கண்காணித்து குற்றச் செயல்களைத் தடுக்க உதவும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாதுரை, நகர காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.