தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் கூடுதல் கட்டடம் திறப்பு

 தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் ரூ. 3 கோடியே 82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:56 pm

DIN

 தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் ரூ. 3 கோடியே 82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 12 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் ரூ. 3 கோடியே 82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை மாணவா்கள் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா் ஜோதி வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பிஎன்பி.இன்பசேகரன், கல்லூரி முதல்வா் செண்பகலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரி ஊழியா்கள், மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.