தருமபுரி மைய நூலகத்தில் எம்எல்ஏ ஆய்வு
தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டாா்.


தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி, நெசவாளா் காலனியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முதல்நிலை நூலக அலுவலா் ஆா்.மாதேஸ்வரனிடம் நூலகத்துக்குத் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, ரூ. 10,000 செலுத்தி தன்னை நூலகத்தின் கொடையாளராக இணைத்துக் கொண்டாா். அப்போது, நூலகத்தை துய்மையாக பராமரிக்கவும், கூடுதல் கட்டடங்கள், பழுதான கட்டட அறைகளின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, கூடுதல் கழிவறை கட்டட வசதி, போட்டித் தோ்வுகள் எழுதும் நூலக வாசகா்களுக்குத் தேவையான நூல்கள், கூடுதலாக தினசரி நாளேடுகள் வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
இதில், பாமக மாவட்டச் செயலா் பெரியசாமி, நூலக ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...