சுதந்திர தின விழா உரை தொகுப்பு குறுந்தகடு வெளியீடு
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் சுதந்திர தின விழா உரை தொகுப்பு குறுந்தகடு வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் சுதந்திர தின விழா உரை தொகுப்பு குறுந்தகடு வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கல்லூரியில் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், 75 சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து 75 சிறப்புரையாளா்கள் 75 மணி நேரம் 75 நாள்கள் காணொலி வழியாக உரையாற்றினா்.
இந்த உரையின் தொகுப்பு அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா கல்லூரி கூட்ட அரங்கில் முதல்வா் செள.கீதா தலைமையில் நடைபெற்றது. குறுந்தகட்டை கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் சி.ஜோதி வெங்கடேஸ்வரன் வெளியிட்டாா். இதனை, ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் பெற்றுக்கொண்டாா் (படம்).
இதில், தமிழ்த் துறைத் தலைவா் மு.செந்தில்குமாா் வரவேற்று பேசினாா். கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரி தமிழ்த் துறை கா.சிவகாமி, கல்லூரி பேராசிரியா்கள், மாணவியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...