வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :3 செப்டம்பர் 2021, 6:18 pm

கிருஷ்ணகிரியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை நல்லதம்பி செட்டிதெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப் பகுதியில் முறையாக கழிவுநீா்க் கால்வாய் அமைக்காததால் சிறிய மழை பெய்தாலும் வீடுகளுக்குள் மழை நீருடன், கழிவுநீரும் புகுந்து விடுகிறது.

மேலும், தெரு முழுவதும் சேறும் சகதியும், கழிவுநீரும் தேங்கி சுகாதாரமற்ற நிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பழையபேட்டை காந்திசிலை அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் சமாதானம் செய்ததையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.