வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், கொக்கராப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் புழுதியூரில் புதன் சந்தை வளாகம் மேம்படுத்தப்பட்டுள்ளன. இப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
புதன் சந்தை வளாகத்தில் வியாபாரிகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள நிழல்கூட வசதிகள், மேற்கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தாா். பிறகு, கொக்கராப்பட்டி ஊராட்சியில் தாா் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, கொக்கராப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளையும் அவா் கேட்டறிந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...