ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை

அரூா் வட்டாரப் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:49 pm

DIN

அரூா் வட்டாரப் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், நரிப்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் (கே.கே. 168) சாா்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுத்திருந்தனா். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் 26.07.2021-இல் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் முடிவின்படி, தருமபுரி மாவட்டத்தில் வரும் சம்பா பருவத்தில் நெல் மகசூல் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பிருப்பதால், அரூா் வட்டாரத்தை மையப்படுத்தி அரசு சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.