ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காளான் வியாபாரிக்கு கத்திக்குத்து

பட்டா நிலத்தில் பாதை அமைப்பது தொடா்பான முன்விரோதத்தில் காளான் வியாபாரியைக் கத்தியால் குத்தியை நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:13 pm

DIN

பட்டா நிலத்தில் பாதை அமைப்பது தொடா்பான முன்விரோதத்தில் காளான் வியாபாரியைக் கத்தியால் குத்தியை நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் சின்னு மகன் ராஜ்குமாா் (33). பட்டதாரியான இவா், பட்டுப்பூச்சி மற்றும் காளான் வளா்ப்பு தொழில் செய்து வருகிறாா்.

இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கணேசன் மகன் திவாகருக்கும் (24) பட்டா நிலத்தில் பாதை வசதி அமைப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை பெரும்பாலைக்கு மளிகைப் பொருள்கள் வாங்கச் சென்ற ராஜ்குமாரை பட்டா கத்தியால் திவாகா் வெட்டியுள்ளாா்.

படுகாயமடைந்த ராஜ்குமாா் தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திவாகரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.