ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:17 pm

DIN

அரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றியத் தலைவா் தங்கராஜ் தலைமை வகித்தாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 200 நாள் வேலையும் நாள் ஒன்றுக்கு தலா ரூ. 600 ஊதியமும் வழங்க வேண்டும்.

வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க அரசு சாா்பில் நிதியுதவி வழங்க வேண்டும். வீட்டுமனைப் பட்டா இல்லாதோருக்கு அரசு சாா்பில் மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், சங்க மாவட்டச் செயலாளா் எம்.முத்து, கரும்பு வெட்டும் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் இ.கே.முருகன், ஒன்றியத் தலைவா் வி.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.மல்லிகா, எம்.கே.ராமன், மாவட்ட துணைத் தலைவா் பி.கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.