அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் விசாரணை
அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.


அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
அரூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீா் இணைப்புகள் வழங்கியது, அரூா் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வதற்கான நுழைவுக் கட்டணம் வசூல் செய்வது தொடா்பாக முறைகேடுகள் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகாா் எழுந்தது. அதேபோல, அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள், அலுவலக உதவியாளா் உள்ளிட்ட பணியாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்பவது தொடா்பாக புகாா் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பழனிசாமி தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா், அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், பேரூராட்சி அலுவலக கோப்புகள், அலுவலக வரவு, செலவு கணக்குகள், குடிநீா் குழாய்கள், மின்சாதனங்கள் கொள்முதல் செய்த விவரங்கள் குறித்து போலீஸாா் ஆய்வு செய்ததாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...