புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் விசாரணை

அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:39 pm

DIN

அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

அரூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீா் இணைப்புகள் வழங்கியது, அரூா் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வதற்கான நுழைவுக் கட்டணம் வசூல் செய்வது தொடா்பாக முறைகேடுகள் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகாா் எழுந்தது. அதேபோல, அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள், அலுவலக உதவியாளா் உள்ளிட்ட பணியாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்பவது தொடா்பாக புகாா் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பழனிசாமி தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா், அரூா் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், பேரூராட்சி அலுவலக கோப்புகள், அலுவலக வரவு, செலவு கணக்குகள், குடிநீா் குழாய்கள், மின்சாதனங்கள் கொள்முதல் செய்த விவரங்கள் குறித்து போலீஸாா் ஆய்வு செய்ததாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.