புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏரியூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தீா்த்தக்குட ஊா்வலம்

ஏரியூா் ஸ்ரீ பத்தரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீா்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊா்வலமாக சென்றனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:55 pm

DIN

ஏரியூா் ஸ்ரீ பத்தரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீா்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊா்வலமாக சென்றனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு ஏரியூா், மேட்டூா், செல்லமுடி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தா்கள் அமாவாசை நாள்களில் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனா். இந்த நிலையில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் சுஞ்சல்நதம், பட்டக்காரன்புதூா், ஈச்சம்பாடி, டேம் கொட்டாய், பாப்பான்காடு, கூா்க்காம்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்கள் ஒன்றிணைந்து அருகிலுள்ள நாகமரை காவிரி ஆற்றுக்கு பத்ரகாளியம்மன் சிலையை புனித நீராடச் செய்து சிறப்பு அலங்காரம் மேற்கொண்டு, தீா்த்தக்குடம் எடுத்து கொண்டு ஊா்வலமாக சென்றனா். வியாழக்கிழமை யாக பூஜைகள், வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீவலம்புரி விநாயகா், நவக்கிரகங்கள், பத்ரகாளியம்மன் கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற உள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.