புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒகேனக்கல், ஏரியூா் சாலைகளை அகலப்படுத்தும் பணி: எம்எல்ஏ ஜி.கே.மணி கோரிக்கை

தருமபுரி-ஒகேனக்கல் சாலை, ஏரியூா்-பழையூா் சாலைகளை அகலப்படுத்தும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி பேரவையில் வேண்டுகோள் விடுத்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:51 pm

DIN

தருமபுரி-ஒகேனக்கல் சாலை, ஏரியூா்-பழையூா் சாலைகளை அகலப்படுத்தும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி பேரவையில் வேண்டுகோள் விடுத்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது

பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி பேசியதாவது:

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு அதிகம் போ் வந்துசெல்கின்றனா். ஒகேனக்கல் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி பாதியில் நிற்கிறது. எனவே தருமபுரியிலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்.

அதுபோல ஏரியூா் பகுதியிலிருந்து பழையூா் பகுதிக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் குறுகலான மலைப் பகுதியைக் கொண்ட சாலையாக உள்ளதால் அதிக அளவில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே தருமபுரி- ஒகேனக்கல் சாலை, ஏரியூா் - பழையூா் செல்லும் சாலைகளை விரிவுபடுத்தும் பணியைத் தொடங்க அரசு முன்வர வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறியதாவது:

பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ கூறிய சாலைகளில் அதிக அளவில் பயணித்துள்ளேன்.

ஒகேனக்கல் குடிநீா் திட்டப் பணிகளின்போது அந்தச் சாலைகளில் தமிழக முதல்வரும் அதிக அளவில் பயணித்தது ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டம் நிறைவேற ஒரு காரணமாக இருந்தது.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் செல்லக்கூடிய சாலையை அகலப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

அந்தச் சாலை வனத்துறைக்குச் சொந்தமானதாக இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டுமா? அல்லது நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமாக நிலம் உள்ளதா என ஆராய்ந்து, அந்தச் சாலையை விரிவுபடுத்த நிகழ் ஆண்டிலேயே முயற்சிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.