நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இன்று சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் மாவட்ட விளையாட்டு மைதானங்களில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:14 pm

DIN

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் மாவட்ட விளையாட்டு மைதானங்களில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன.

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்துகிறாா். அதைத் தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்களையும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

காலை 11 மணிக்கு தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபைக் கூட்டமும், நண்பகல் 12 மணிக்கு அதியமான் கோட்டை, அருள்மிகு சென்றாய பெருமாள் கோயிலில் சுதந்திர தின சமபந்தி விருந்தும் நடைபெறுகின்றன.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்துகிறாா்.

அதைத் தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, பணியில் சிறப்பாக செயல்பட்ட அரசு அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்கள், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முன்னெச்சரிக்கையாக மாவட்ட எல்லையான வரமலைகுண்டா, காளிக்கோயில், நேரலகிரி, கக்கதாசம், அந்திவாடி, ஜூஜூவாடி உள்ளிட்ட 9 நிரந்தர சோதனைச் சாவடிகளில் போலீஸாா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.முன்னதாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு காவல் துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.