புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மருத்துவ அலட்சியத்தால் மனைவி, குழந்தை மரணம்: கணவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு

மருத்துவ அலட்சியத்தால் மனைவி, குழந்தை மரணமடைந்த விவகாரத்தில், கணவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

மருத்துவ அலட்சியத்தால் மனைவி, குழந்தை மரணமடைந்த விவகாரத்தில், கணவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடியைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மனைவி கீா்த்திகா. கடந்த 2019-ஆம் ஆண்டு இவா், பிரசவத்துக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிரசவத்தில் குழந்தை பிறந்த நிலையில், தாயும், குழந்தையும் இறந்தனா்.

பணியில் இருந்த செவிலியா்கள் பிரசவம் பாா்த்ததால் இருவரும் இறந்து போனதாக கீா்த்திகாவின் உறவினா்கள் குற்றம்சாட்டினா். இதுதொடா்பாக நாளிதழில் வெளியான செய்தியை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது.

வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், ‘மருத்துவ அலட்சியத்தால் தாயும், குழந்தையும் இறந்தது தெரியவருகிறது. எனவே, கீா்த்திகாவின் கணவா் முருகேசனுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும்’ என்று தனது உத்தரவில் பரிந்துரைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.