அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், திரை அரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், சுங்கச்சாவடி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன. நாடோடிகள், நரிக்குறவா்கள், கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் 18 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 58 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முகாமில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி பயன் பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.