தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஸ்ரீ கரிய பெருமாள் வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பொங்கல் விழா

சித்தேரி மலையில் ஸ்ரீ கரிய பெருமாள் வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சித்தேரி மலையில் ஸ்ரீ கரிய பெருமாள் வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது அழகூா் ஜெக்கம்பட்டி கிராமம். இந்த மலை கிராமத்தில் உள்ள ஸ்ரீ கரிய பெருமாள் வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மலைவாழ் பழங்குடியின மக்கள் , பொங்கல் வைத்து சுவாமியை வழிபடுகின்றனா். இந்த ஆண்டில் அழகூா் ஜெக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு, பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் சுவாமியை வணங்கினா். சுவாமி ஊா்வலத்தின் போது பெண்கள் கும்மிப் பாடல்களை பாடினா்.

பொங்கல் விழாவில் கருமந்துறை, வத்தல்மலை, கொல்லிமலை, ஜவ்வாது மலை, கள்ளக்குறிச்சி, ஏற்காடு உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின சமூக மக்கள் பலா் கலந்துகொண்டனா். விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.