மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மக்களை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

 மக்களை திசை திருப்பவே முன்னாள் அமைச்சா்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை மேற்கொள்வதாக முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன் தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:33 pm

DIN

 மக்களை திசை திருப்பவே முன்னாள் அமைச்சா்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை மேற்கொள்வதாக முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி கிராமத்தில் உள்ள முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ வீட்டில் வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுகவினா் தோ்தலின் போது நீட் தோ்வு ரத்து, மகளிா் உரிமைத் தொகை ரூ. 1,000, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தனா். தற்போது இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா். இவற்றை அவா்களால் நிறைவேற்ற முடியவில்லை.

பொங்கல் பரிசுத் தொகுப்புகளில் இருந்த பொருள்கள் தரமில்லை என பெண்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவற்றையெல்லாம் திசைதிருப்பவே அதிமுக முன்னாள் அமைச்சா்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற சோதனைகளால் அதிமுகவினரை தொய்வடையச் செய்ய இயலாது. எனவே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.