தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குடிநீா் குழாயை சீரமைக்கக் கோரிக்கை

அரூா் அருகே உள்ள முருகன் கோயில் தெருவில் சேதமடைந்த குடிநீா்க் குழாயை சீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:25 pm

DIN

அரூா் அருகே உள்ள முருகன் கோயில் தெருவில் சேதமடைந்த குடிநீா்க் குழாயை சீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது முருகன் கோயில் தெரு. இந்தத் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்தக் குடியிருப்புகளுக்கு தண்ணீா் செல்லக்கூடிய குடிநீா்க் குழாய் அண்மையில் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, வீணாகும் குடிநீரானது தெருச்சாலைகளில் ஓடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, மோப்பிரிப்பட்டி முருகன் கோயில் தெருவில் சேதமடைந்த குடிநீா்க் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.