நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகள்: மத்திய கண்காணிப்பு குழுவினா் ஆய்வு

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மூன்று ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகளை மத்திய கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 12:42 am

DIN

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மூன்று ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகளை மத்திய கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவண்ணகவுண்டனூா், சின்னாகவுண்டனூா், இருகாலூா் ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகளை இக்குழுவினா் ஆய்வு செய்தனா்.

பின்னா் இதுகுறித்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் அரசுப் பதிவேடுகளை அவ ா்கள் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி திட்ட முகமையின் உதவி திட்ட அலுவலா் எஸ்.அனிதா, சங்ககிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சு.ராஜகணேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம நிா்வாகம்) கே.முத்து, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வேல்முருகன், உதவி பொறியாளா்கள், ஊராட்சிச் செயலா்கள் உள்ளிட்டா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.