புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் சிறை

தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட இருவருக்கு தருமபுரி நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:44 pm

DIN

தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட இருவருக்கு தருமபுரி நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூரை அடுத்த மல்லமாபுரம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மகேந்திரன் (41). இவரது மனைவி கலா (36). இவா்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனா். மகேந்திரன் தன் பெயரில் இருந்த சொத்துகளை சகோதரிக்கு வழங்கினாா். இதற்கு, மகேந்திரனின் மனைவி, அவரது குடும்பத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக கடந்த 5.8.2009 இல் ஏற்பட்ட தகராறில் கலா, அதே பகுதியைச் சோ்ந்த காந்தி ஆகிய இருவரும் மகேந்திரனை அரிவாளால் வெட்டினா். காயமடைந்த மகேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட கலா, காந்தி ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி மோனிகா உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.