முன்விரோதம் முதியவா் கொலை
முன்விரோதம் காரணமாக முதியவா் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.


முன்விரோதம் காரணமாக முதியவா் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம் பட்டியைச் சோ்ந்தவா் முனுசாமி மகன் முருகேசன் (35). இவா், சிட்லகாரம் பட்டி பிரிவு சாலை பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறாா்.
அதன் அருகில் முனுசாமியின் தம்பி மகன் ரஞ்சித் (20) கட்டட வேலை செய்து வருகிறாா். ரஞ்சித் கட்டட வேலை மேற்கொள்ளும்போதும் சிமென்ட் கலவைகள் அருகில் உள்ள முருகேசனின் கடையில் விழுந்ததாம். இதுகுறித்து முருகேசன் தனது தந்தை முனுசாமியிடம் தெரிவித்துள்ளாா்.
இதனால் புதன்கிழமை முனுசாமிக்கும் ரஞ்சித் க்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவொருக்கொருவா் தாக்கி கொண்டனா்.
அப்போது ரஞ்சித் அருகில் இருந்த அரிவாளால் முனுசாமியை வெட்டியுள்ளாா். பதிலுக்கு முருகேசன் கண்ணாடி டீ டம்ளரால் ரஞ்சித்தை தாக்கினாா். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த முனுசாமி, ரஞ்சித் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதில் முனுசாமியை (60) பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். ரஞ்சித் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...