தருமபுரியில் பகுதிநேர சூரிய கிரகணம் தென்பட்டது.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும்.
தீபாவளி பண்டிக்கைக்கு மறு நாளான இன்று (அக்.25) பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. அதாவது, சூரியன் மறையும் நேரத்தில் தமிழகத்தில் அதன் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாகக் காட்சியளித்தது.
தமிழகத்தில் மாலை 5.14 முதல் 5.44 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் சூரிய கிரகணம் ஏற்பட்டது.
அதன்படி, தருமபுரி மாவட்டத்திலும் பகுதிநேர சூரிய கிரகணம் இன்று மாலை தென்பட்டது.