அரூரில் ரூ. 18 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் வெள்ளிக்கிழமை ஏலம் போனது.
தருமபுரி மாவட்டம், அரூா் கச்சேரிமேட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்திலும், திரு.வி.க. நகரில் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்திலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பலா் பங்கேற்கின்றனா். இதையடுத்து, அரூரில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், விரலி மஞ்சள் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6309-க்கும், குறைந்தபட்சம் ரூ. 4909-க்கும் விற்பனையாது. இதேபோல், உருளை மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ.5169-க்கும், குறைந்தபட்சம் ரூ.4509-க்கும் விற்பனையாது. இந்த ஏலத்தில் சுமாா் 650 மஞ்சள் மூட்டைகள் விற்பனையானதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.