அரூரில் விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

அரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
Published on
Updated on
1 min read

அரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றியத் தலைவா் டி.ஜடையாண்டி தலைமை வகித்தாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 200 நாள் வேலையும், நாள் ஒன்றுக்கு ரூ. 600 ஊதியமும் வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் அடையாள அட்டை வைத்துள்ள தொழிலாளா்கள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை நடைபெறும் இடங்களில் தற்காலிக நிழல், குடிநீா் மற்றும் மருத்துவ வசதிகளை செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்க மாவட்டச் செயலா் எம்.முத்து, மாவட்ட துணைத் தலைவா் இ.கே.முருகன், ஒன்றியச் செயலா் கே.குமரேசன், ஒன்றியப் பொருளாளா் பி.வீரப்பன், ஒன்றிய துணைத் தலைவா்கள் பி.சொக்கலிங்கம், எம்.தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com