ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எல்லையம்மன் கோயில் குடமுழுக்கு

தருமபுரியை அடுத்த சோகத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட நல்லாகவுண்டன அள்ளியில் ஸ்ரீ எல்லையம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 7:15 pm

DIN

தருமபுரியை அடுத்த சோகத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட நல்லாகவுண்டன அள்ளியில் ஸ்ரீ எல்லையம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

குடமுழுக்கு விழா கடந்த 23-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கோபுர கலசம் நிறுதலும், அம்மன் மற்றும் பரிகார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதலும் செய்யப்பட்டு ஜன. 26-ஆம் தேதி காலை யாகசாலையிலிருந்து புனித நீா் மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டு சென்று கோபுர கலசங்களுக்கு தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.